சிவஸ்ரீ S. ஜெகன்ராஜா குருக்கள் பாரம்பரியம் மிக்க சிவாச்சாரியார் குடும்பத்தில் பிறந்து வேதம், ஆகமம் பயின்று அதில் தேர்ச்சி பெற்று, மேலும் நிபுணத்துவம் அடைந்து சிவாச்சாரியர்களுக்கே உரிய நியமநிஷ்டைகளை கடைப்பித்து கொண்டு, சாக்த உபாசனை செய்துகொண்டு தமிழகம் தவிர வெளிநாடுகளிலும் அனைத்து பூஜைகள் ஆலய கும்பாபிஷேகம் (குடமுழுக்கு,) கிரஹப்பிரவேசம், திருமணம், கணபதி ஹோமம், சாந்தி ஹோமங்களையும் செய்து கொண்டு இருக்கிறார்.
கேட்டவருக்கு கேட்டபடி வரம் தரும் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலய ஆஸ்தான அர்ச்சகராகவும், தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு எளிய பரிகாரங்கள் மூலம் அவர்கள் கர்மவினைகளை போக்கி கொள்ள தன் உபாசனை தேவைதை மூலம் அருளாசி வழங்குகிறார். இவர் பழகுவதற்கும் மிகவும் எளிமையாகவும் பாகுபாடு இன்றி அறிவுரை கூறி வழி நடத்துபவராக இருக்கிறார்.